October 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கடலூர் மேற்கு மாவட்டம், புவனகிரி பேரூர் கழக செயலாளர் திரு.H.சையது பிலால் அவர்களின் தாயார் திருமதி. H.சலீமா பி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.M.சௌந்தரராஜன் அவர்களின் மனைவி திருமதி. காந்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் கொடூரத் தாக்குதலில் உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தன் கையில் இருந்த தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த கொடிகாத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தன் இளமைப் பருவத்தில் பாதியளவு கூட அனுபவிக்காமல் தாய்நாட்டின் விடுதலைக்கான வேள்வியில் தன் உயிரையே தியாகம் செய்த திருப்பூர் குமரன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவர் பிறந்த இந்நாளில் நினைவில் வைத்து போற்றுவோம்.
October 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜார்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியின் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வரும் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த திரு.சுகுமாரன் அவர்கள், கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கண்ணிவெடி வெடித்துச் சிதறியதில் ஒரு காலை இழந்திருக்கும் வீரர் திரு.சுகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
October 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற தலைவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் வளர்ச்சி, கல்விப் புரட்சி, தொழில் வளர்ச்சி, பாசனத் திட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலத்திற்காக மட்டுமே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
October 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதகுலத்தின் மிகப்பெரிய சக்தி அகிம்சை தான் என முழங்கி, சத்தியாகிரகம் எனும் அறவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று அன்பு, அகிம்சை, அமைதியை நாட்டு மக்களுக்கு போதித்ததோடு, தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து இந்திய சரித்திரத்தில் புகழ்மிக்க சகாப்தங்களை படைத்த மகாத்மா காந்தி அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நடிப்பை தன் உயிர்மூச்சாகக் கருதி வெள்ளித்திரையில் உச்சம் தொட்டவரும், மக்கள் அனைவராலும் நடிகர் திலகம் என போற்றப்பட்டவருமான செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. உணர்ச்சிமிகுந்த தன் நடிப்பால், மொழியால், நடையால், வசன உச்சரிப்பால் ஒட்டுமொத்த திரையுலகிற்கான சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சாதனைகளை போற்றிக் கொண்டாடுவோம்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரப்பதம் அதிகளவில் இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் – குறுவை பருவ நெல் கொள்முதலில் ஈரப்பதத்தின் அளவை 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை சாகுபடியின் அறுவடைக்கான பணிகள் அண்மையில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு சில தினங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஈரப்பதம் இருப்பதாக கூறி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி மற்றும் அறுவடை காலத்தில் மழை பெய்வது தொடர்கதையாகி வரும் நிலையில், ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நெல் ஈரப்பதத்தை குறைக்க கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்முதல் செய்யப்படும் ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.