தஞ்சாவூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பிலிருக்கும் திரு.T.பன்னீர்செல்வம் மற்றும் தஞ்சாவூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைத்தலைவர் திரு.வீமராஜன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.