September 8, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திரு.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்துகிறார்கள்!
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்தொழித்த மாவீரருமான சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினம் இன்று. போர்க்களத்தில் ஆங்கிலேய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, தாய் மண்ணையும், மக்களையும் காத்திட தன் உயிரையும் துறந்து வீரமரணமடைந்த தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
September 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 6, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 “நியாயத்திற்கு ஒரு மூக்கையா” என பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக மக்கள் பணியாற்றியவருமான உறங்காப்புலி திரு.P.K மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று… போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, தென் தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டதோடு, நீதிக்கும் நேர்மைக்கும் சிறந்த அடையாளமாக திகழ்ந்த திரு P.K மூக்கையா தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
September 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை துணைத்தலைவர் ஆகியோர் நியமனம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அழிவில்லா செல்வமாம் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த இந்நாளில் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொது அறிவு ஆகியவற்றையும் சேர்த்து போதித்து, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணியை இந்நாளில் போற்றி கொண்டாடிவோம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று… எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மிலாது நபி வாழ்த்துகள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்