September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மிலாது நபி வாழ்த்துகள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக இணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், காரியாபட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாகப்பட்டினம் மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், கீழையூர் மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்: லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம் நகரக் கழக நிர்வாகிகள், அரியப்பம்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: பாபநாசம் கிழக்கு மற்றும் பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
September 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கல்வித் தந்தை திரு.P.K.மூக்கயா தேவர் அவர்களின் நினைவு தினம்: உசிலம்பட்டியில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
September 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று, நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.