May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக திரு. மா.பா.ரோகினிகிருஷ்ணகுமார் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி வடக்கு மற்றும் திருச்சி தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்கள் இனி திருச்சி மேற்கு மாவட்டம், திருச்சி வடக்கு மாவட்டம், திருச்சி மத்திய மாவட்டம், திருச்சி தெற்கு மாவட்டம் என நான்கு மாவட்டக் கழகங்களாக மறு சீரமைப்பு. திருச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் தொட்டியம்.திரு.M.ராஜசேகரன், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் பீரங்கி.திரு.K.சுப்ரமணியன், திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு R.R.தன்சிங், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.A.சாகுல்ஹமீது நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் S.புதூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் S.புதூர் மேற்கு ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்ட பகுதிக் கழக செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், சிவகங்கை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், திருப்பத்தூர் மற்றும் நெற்குப்பை பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், அறந்தாங்கி வடக்கு மற்றும் அறந்தாங்கி கிழக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.B.K.R.சதிஷ்குமார், வேலூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.M.K.பூபாலன், இராணிப்பேட்டை மாவட்டக் கழக செயலாளராக திரு. K.சிட்டிபாபு, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.இறை R.வெங்கடேஷ் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக அமைப்புச் செயலாளர்களாக திரு.V.D.தருமலிங்கம் மற்றும் காட்பாடி திரு.S.ராஜா நியமனம்
May 25, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி – குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது? விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ? எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
May 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தினத்தந்தி நாளிதழைத் தோற்றுவித்து பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பத்திரிகைத் துறையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.