July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் ரெட்டியாரசத்திரம் வடக்கு, ரெட்டியார்சத்திரம் மத்தியம் மற்றும் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஆகிய மூன்று ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் வீரபாண்டி வடக்கு, வீரபாண்டி தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “வீரபாண்டி வடக்கு ஒன்றியம்”, “வீரபாண்டி தெற்கு ஒன்றியம்” மற்றும் “வீரபாண்டி கிழக்கு ஒன்றியம்”, என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கிணத்துக்கடவு வடக்கு, கிணத்துக்கடவு தெற்கு மற்றும் பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு), பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஆகிய ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், பகுதி மற்றும் மல்லூர் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
July 29, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் நியமனம்.
July 28, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதும், சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுப்பதும் தான் தவெகவின் அடிப்படை கொள்கையா? – மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தவெகவினர் அரங்கேற்றும் அத்துமீறல்களுக்கும் அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
July 28, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு. ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்திருக்கும் பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.