February 3, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
February 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு. ஓ.பி.ரவீந்திரநாத் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
February 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை வியாசர்பாடியில் கஞ்சா பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர் – இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் எடுத்து வந்திருந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது. கல்வி நிலையங்களில் தொடங்கி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் வரை நடைபெறும் மோதல் சம்பவங்களுக்கும், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? எனவே, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் கும்பலையும் கண்டறிந்து, அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இளம் தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
February 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய்த்தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்; சாமானியரும் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கொள்கைக் கோமான்; தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. ஆழ்ந்த அரசியல் ஞானம், சமூக மாற்றத்திற்கான சிந்தனை, மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் மன தத்துவத்துடன், சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க உதவும் மத்திய பட்ஜெட்!
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலைச்சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நியப் படைகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தலை சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நிய படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழர்களின் பண்பாட்டைத் தனது கட்டட கலை மற்றும் கோவில் திருப்பணிகளின் மூலம் சிறப்பித்து, ஜாதி – மத பேதங்களைக் கடந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் மகத்தானவராகத் திகழ்ந்த திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று. இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நம்மைக் காத்தருளும் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இறைவன் ஒளி வடிவமானவர் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க சத்திய ஞான சபையை நிறுவியவரும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே ஆகச்சிறந்த இறைப்பணி என்பதில் உறுதியாக இருந்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் ஜோதி வடிவான தினம் இன்று. தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஆண்டவரை அடையும் அருளியலை வழங்குவதோடு, தேனினும் இனிய திருவருட்பாக்களின் மூலம் மனித குலம் நீடூழி வாழ்வதற்கான ஒழுக்க நெறிமுறைகளையும் போதித்த வள்ளலார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கியவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களோடு, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களையும் இயற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய மாமனிதர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.