April 15, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 FORMAT C-2: Second Spell DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY (As per the judgment dated 25th September, 2018 of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr.) Name of Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM, Name of Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026, Name of State: TAMIL NADU
April 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புத்தாண்டு தினத்தை விஷு திருநாளாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழும் இடங்கள் அனைத்திலும் தங்களுடைய பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிப் பாதுகாக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
April 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் ஒன்றிய கழகம் – இராமநாதபுரம் வடக்கு, இராமநாதபுரம் தெற்கு என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு – இராமநாதபுரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.T.ரமேஷ் மற்றும் இராமநாதபுரம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.R.தினகரன் நியமனம்.
April 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக திரு.M.சுந்தர் ஜெகன் அவர்கள் நியமனம்.
April 14, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.S.பிரசாந்த் அவர்களின் தாயார் திருமதி.S.ரதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை, சமுதாயத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பரந்த படிப்பும், ஆழ்ந்த அறிவும், வியக்கத்தக்க நெஞ்சுரம் கொண்டிருந்து, நாடு முழுவதும் சமதர்ம சமூகநீதி தத்துவங்களை வேரூன்றச் செய்த மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
April 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல யூடியூபர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
April 13, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு (வடக்கு) ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.ஜானகிராமன் அவர்களின் தாயார் திருமதி.K.முத்துலட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 13, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026: கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.
April 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்: சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மலரும் தமிழ்ப்புத்தாண்டு தமிழக மக்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைவதோடு, அனைவரின் வாழ்விலும் வளம் பெருகி, வசந்தம் மலர்ந்து, அன்பு மேலோங்கி, அமைதி நிலவும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.