January 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று… பாலின பாகுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்புகளின் மூலம் பெண் குழந்தைகள் சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக நிற்கவும், சமத்துவமிக்க வளமான எதிர்காலத்தை பெற்றிடவும் உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களையும் குற்றச் சம்பவங்களையும், அடியோடு தடுத்து நிறுத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 24, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி 195 வட்டக் கழக செயலாளர் திரு.M.கஜேந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலூர் தொகுதிக்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்து மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ் கல்வெட்டுகள், சமணப் படுகைகள், பழமையான குடைவரைக் கோயில்கள் போன்ற தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களோடு, ஏரிகளும், குளங்களும் அடங்கிய இயற்கை வளங்களையும், பல்லுயிர் பாரம்பரிய தளத்தையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய செப்டம்பர் 2023 முதல் ஏலம் முடிவடைந்த நாளான நவம்பர் 7, 2024 வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மேலூர் பகுதியில், டங்ஸ்டன் திட்டம் வர உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கபட நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக கூறுவது, “பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்” என்ற கதையையே நினைவு படுத்துகிறது. தமிழகத்தில் மக்களை போராட தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் பலனடைய நினைத்த திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையிலும், கனிம வளத்தை விட மக்கள் நலனே முக்கியம் எனக்கருதியும் இம்முடிவை எடுத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மதுரை மாவட்டம் மேலூர் மக்கள் சார்பாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், பண்டைய கால புராதானச் சின்னங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
January 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வங்கம் தந்த சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
January 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் திரு.K.சிவசண்முகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிழக்கு ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் திரு.V.விமல்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிழக்கு ஒன்றிய மேலநெட்டூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.G.ராஜ்குமார் அவர்களின் தந்தை திரு.க.கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.விஜய அருண் பிரபாகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
January 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: வடசென்னை மத்தியம் மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 42வது தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு.M.தனசேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளராகவும், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், அந்தியூர் வடக்கு மற்றும் அந்தியூர் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்களாகவும் நியமனம்.