March 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
March 8, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கீழக்குயில்குடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.N.பாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 8, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.D.செந்தில்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 7, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய கண்ணனூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.கொடிவீரணன் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தில் மகளிர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு பிறப்பளிக்கும் அன்னையாக, தோழியாக, தங்கையாக, மனைவியாக, மகளாக என வாழ்க்கையின் அனைத்துவித பரிமாணங்களிலும் இன்றியமையாத அர்ப்பணிப்பை வழங்கிவரும் மகளிர் ஒவ்வொருவரின் மகத்துவமிக்க பங்களிப்பை நாம் அனைவரும் போற்றி வணங்கிடுவோம். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் காவல்நிலையங்கள் என இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நன்றி உணர்வோடு இந்நாளில் நினைவு கூர்வோம். சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில், அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை தன்வசப்படுத்தி வெற்றியுடன் கூடிய புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
March 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தி.மு.க அரசு இன்று அழைத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென்சென்னை மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன் அவர்கள் கலந்து கொண்டு, கழகத்தின் நிலைப்பாட்டை கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
March 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை தன் சொந்த செலவில் செலுத்தும் தலைமை ஆசிரியர்கள் – மின்கட்டணத்தை கூட செலுத்த முடியாத பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி உயர்த்தப் போகிறது? தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான நிதி தற்போது வரை ஒதுக்கப்படவில்லை என நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசுப்பள்ளிகளுக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள், அலுவலர் பயணப்படி, மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பிப்ரவரி மாதம் ஒதுக்க வேண்டிய நிதி தற்போதுவரை ஒதுக்கப்படாத காரணத்தினால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்த பணத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான வகுப்பறைகள் என ஏற்கனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அக்கல்வியை பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளை கூட ஏற்படுத்தித் தராமல் , அதற்கு மூடுவிழா நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற கால தாமதங்கள் ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய துவார் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.மைனர் அவர்களின் சகோதரர் திரு.C.மதியழகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்ற கொள்கை உணர்வோடு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடி தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினம் இன்று. பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமைகள் கொண்டவர்கள் என முழங்கி, விளிம்பு நிலை மக்களுக்கும் சமூகநீதியை பெற்றுத்தந்த பெருமைக்குரிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில், அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
March 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வை எந்தவித பதற்றமுமின்றி, நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, அவரவர் விரும்பிய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடர மாணவ, மாணவியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.