December 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும். டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 6, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.விஜயகுமார் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
December 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மூளையாக விளங்கியவரும், சமுதாய அமைப்பிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம வாய்ப்பு மற்றும் அதிகாரம் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடியவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று. சட்டத்துறை மட்டுமல்லாது அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
December 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
December 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் – இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
December 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் (05.12.2025) – உறுதிமொழி
December 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் நகர 10வது வார்டு கழக செயலாளர் திருA.P.இளங்கோ அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
December 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.M.ஜெஸ்லர் அவர்களின் மனைவி திருமதி.J.எலிசபெத் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
December 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்றவருமான திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திறமைமிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழ்சினிமாவுக்கு அடையாளப் படுத்திய திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.