June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், வட்டம் / வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதி, பேரூர் ஆகியவற்றின் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தருமபுரி மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அரூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், அரூர், பாலக்கோடு, பொ.மல்லாபுரம் ஆகிய பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஒன்றியம் “மொரப்பூர் கிழக்கு” மற்றும் “மொரப்பூர் மேற்கு” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, பாலக்கோடு வடக்கு ஒன்றியம் “பாலக்கோடு வடக்கு” மற்றும் “பாலக்கோடு மத்தியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, நல்லாம்பள்ளி வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் “நல்லாம்பள்ளி கிழக்கு ஒன்றியம்” என ஒன்றிணைப்பு மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக் கழக நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை தெற்கு ஆகிய ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு நிர்வாகிகள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.R.ஜான்சன் ஜெயசீலன் ஜேக்கப் அவர்களின் தாயார் திருமதி V.காந்திமதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரி அவர்களின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
June 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராகவும், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்து வரலாறு படைத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்- கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றுவதாக பெண் ஊழியர்கள் புகார் – புகாரை விசாரிக்க வேண்டிய விசாரணைக் குழுவே அப்புகாரை வெளியில் கசிய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிடமாற்றம் செய்திருப்பதோடு, அவருக்கான வருகைப்பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதே போல, பெண்கள் அளிக்கும் புகாரை ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணைக் குழுவே, அப்புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் பெண் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலேயே பெண் ஒருவர் பாதிக்கப்படும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்வதோடு, புகாரின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.