February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க உதவும் மத்திய பட்ஜெட்!
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலைச்சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நியப் படைகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தலை சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நிய படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழர்களின் பண்பாட்டைத் தனது கட்டட கலை மற்றும் கோவில் திருப்பணிகளின் மூலம் சிறப்பித்து, ஜாதி – மத பேதங்களைக் கடந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் மகத்தானவராகத் திகழ்ந்த திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று. இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நம்மைக் காத்தருளும் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இறைவன் ஒளி வடிவமானவர் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க சத்திய ஞான சபையை நிறுவியவரும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே ஆகச்சிறந்த இறைப்பணி என்பதில் உறுதியாக இருந்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் ஜோதி வடிவான தினம் இன்று. தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஆண்டவரை அடையும் அருளியலை வழங்குவதோடு, தேனினும் இனிய திருவருட்பாக்களின் மூலம் மனித குலம் நீடூழி வாழ்வதற்கான ஒழுக்க நெறிமுறைகளையும் போதித்த வள்ளலார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
February 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கியவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களோடு, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களையும் இயற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய மாமனிதர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
January 31, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்
January 31, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் அன்பு நண்பருமான திரு H. ராஜா அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
January 30, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள்: சென்னையில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்!
January 30, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா ? – திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா ? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.