November 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 34 தங்கம், 40 வெள்ளி உட்பட 88 பதக்கங்களைக் குவித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கும் வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் – தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும்.டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும்,முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.செந்தில் முருகன் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் – கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளராக திரு.G.அன்புசெல்வம், கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.S.சரவணக்குமார், கழக நெசவாளர் அணி இணைச்செயலாளராக திரு.P.இனியபாரதி நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு C.இராஜேந்திரன் அவர்கள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருத்தங்கல் கிழக்கு மற்றும் திருத்தங்கல் மேற்கு ஆகிய இரண்டு பகுதிக் கழகங்கள் திருத்தங்கல் பகுதி என ஒன்றிணைக்கப்படுகிறது.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சாத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகம் கழக அமைப்பு ரீதியாக சாத்தூர் கிழக்கு ஒன்றியம், சாத்தூர் தெற்கு ஒன்றியம் என இரண்டுடாக பிரிப்பு.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.