April 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை – தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
April 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மீஞ்சூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய போதைக் கும்பல் – திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன. எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன்.
April 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புத்தாண்டு தினத்தை விஷு திருநாளாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழும் இடங்கள் அனைத்திலும் தங்களுடைய பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிப் பாதுகாக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
April 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை, சமுதாயத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பரந்த படிப்பும், ஆழ்ந்த அறிவும், வியக்கத்தக்க நெஞ்சுரம் கொண்டிருந்து, நாடு முழுவதும் சமதர்ம சமூகநீதி தத்துவங்களை வேரூன்றச் செய்த மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
April 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல யூடியூபர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
April 13, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026: கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.
April 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்: சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மலரும் தமிழ்ப்புத்தாண்டு தமிழக மக்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைவதோடு, அனைவரின் வாழ்விலும் வளம் பெருகி, வசந்தம் மலர்ந்து, அன்பு மேலோங்கி, அமைதி நிலவும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
April 12, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன். திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
April 9, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வேலூர் புறநகர் – வேலூர் மாநகர் – இராணிப்பேட்டை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர், வேலூர் மாநகர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
April 6, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. நிலத்தை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும், ரசாயன உரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இயற்கை விவசாயத்தை இயக்கமாக முன்னெடுத்துச் சென்ற ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் தொடர்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.