April 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவரும், இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்தவருமான சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தீண்டாமையை ஒழிக்கவும், சாதி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவமிக்க சமுதாயத்தை நிலைநாட்டவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசியத் தலைவர் அம்பேத்கர் அவரின் அரும்பணிகளை எந்நாளும் போற்றி மகிழ்வோம்.
April 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காப்பதில் முன்னுதாரணமாக திகழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பு, அமைதி, இன்பம் மற்றும் வளத்தை கொடுக்கும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
April 13, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ தேர்தல் அறிக்கைகள் | Election Reports‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத்தொகுதிக்கான பிரத்யேக வாக்குறுதிகள் வெளியீடு!
April 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
April 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நவீன வேளாண்மைக்கு வசப்பட்டிருந்த தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று… இயற்கை வேளாண்மை என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியதோடு, தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
April 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவருமான திரு.மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று. சட்டமன்றத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் ஒரு உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் தமிழகம் வளம்பெறவும், எண்ணற்ற நல்ல திட்டங்கள் நிறைவேறவும் காரணமாக அமைந்தார். தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தொண்டராக, சமூக சேவகராக, அரசியல் தலைவராக, கல்வித் தந்தையாக திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய மக்கள் நல பணிகள் தமிழக மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
April 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.