April 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கழக அமைப்பு செயலாளர் திருமதி.சாருபாலா R. தொண்டைமான் அவர்களின் மாமியாருமான ராணி திருமதி.ரமாதேவி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
April 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
April 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரமிக்க பதவிகளில் நேர்மையான திறன்வாய்ந்த அதிகாரி என்ற பெருமையுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ்குப்தா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், நரேஷ்குப்தாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
April 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; தஞ்சையில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
April 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதியால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மக்களின் உறவினர்களிடம் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் செயற்கை ரசாயனங்களால் பாழாய் போன மண்வளத்தை மீட்டெடுத்து நூற்றுக்கணக்கானோர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட காரணமாக இருந்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம்.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
April 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்வின் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.