பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் வழியில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப்பிடித்தவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான உறங்காப்புலி கல்வி வள்ளல் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்ததினம் இன்று. மாணவப் பருவத்திலிருந்தே தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாகச் செயல்பட்ட தேவர் தந்த தேவர் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லாமையும், பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை எடுத்துரைத்ததோடு, தன் சுக வாழ்க்கையைத் துறந்து, அகிம்சையைப் பின்பற்றி, இயற்கை சக்திகளோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று போதித்த பகவான் மகாவீரர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம். அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி அதன் மாண்பை உலகிற்கே பறைசாற்றிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.