August 11, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் புதல்வர் திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், மாலை முரசு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
August 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் புதல்வரும் மாலை முரசு பத்திரிகையின் அதிபருமான திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. தந்தையை பின்பற்றி பத்திரிகை துறையில் நுழைந்து தமிழ் மொழி மற்றும் தமிழக மக்கள் நலனில் அளவற்ற அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய நற்பணிகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் போற்றுவோம்.
August 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தும் கேரளம் – சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர் அமன் ஷெராவத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கும் அமன் ஷெராவத் அவர்கள் விளையாட்டு உலகில் மென்மேலும் சாதனைகள் புரிந்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
August 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திசெங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு. S. A. குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
August 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது – தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என ஒரு புறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றொரு புறமும் தொடர்கதையாகி வருவது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
August 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செங்கல்பட்டு அருகே அரசுப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து – மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே, கட்டடத்தின் மேற்கூரையின் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்தில் 5 மாணவிகள் உட்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட பின்னரும், பள்ளிக்கல்வித்துறை காட்டும் அலட்சியப் போக்கால் அடுத்தடுத்த விபத்துக்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மிகவும் பழமையான, பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களில் வகுப்பறைகளை நடத்தக் கூடாது என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாணவ, மாணவர்களின் பாதுகாப்பில் இனியும் அலட்சியம் காட்டாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உரிய ஆய்வை மேற்கொண்டு பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமை அடையச் செய்யும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் நீரஜ் சோப்ரா அவர்கள், அடுத்தடுத்த உலகளவிலான போட்டிகளிலும் வெற்றி முத்திரையை பதித்து தனித்துவமிக்க வீரராக திகழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடின பயிற்சி மற்றும் கூட்டு முயற்சியால் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான நான்காவது பதக்கத்தை உறுதி செய்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம், நந்தியம்பாக்கம்ஊராட்சி, நந்தியம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் திரு.வ.அரி அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.