November 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்திரப்பதிவுத்துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தத்தெடுத்தல், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் திமுக அரசால், ஏழை,எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.P.சுந்தரவடிவேல் அவர்களின் தாயார் திருமதி.ருக்மணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 1956 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த தமிழ்நாடு உருவான தினம் இன்று… தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டிய தமிழ்நாடு உருவான இந்நாளில், மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமைகளையும் எந்தவித சமரசமுமின்றி நிலைநாட்ட நாம் அனைவரும் உறுதியேற்போம்!
October 31, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் திரு.பெ.செந்தில்குமார் அவர்களின் மகன் திரு.செ.சுபாஷ் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 31, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 30, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்கள்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவரும், தேசியத்தை தனது உடலாகவும், தெய்வீகத்தை தன் உயிராகவும் போற்றிய மாபெரும் தலைவர் தென்னகத்து நேதாஜி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று… உண்மை, உழைப்பு, தன்னலமற்ற மக்கள் பணிக்கு அடையாளமாக திகழ்ந்து தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத்திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் மற்றும் 595 பூங்காக்களை தனியார் வசம் குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் திடல்களை தனியார் வசம் ஒப்படைப்பதோடு, அதனை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக நிர்ணயித்திருப்பது ஏழை எளிய வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் விளையாட்டு எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஷெனாய்நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாருக்கு தாரை வார்த்திருப்பதோடு அதற்கான வாடகையையும் உயர்த்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விளையாட்டுத்திடல்கள், பூங்காக்கள் மற்றும் அரங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் விரோத தீர்மானங்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.
October 30, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 63வது வட்டக் கழக செயலாளர் திரு.V.குமார் அவர்களின் தந்தையார் திரு.வாட்டார் கடவராயர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.