அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவருமான திரு.மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று. சட்டமன்றத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் ஒரு உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் தமிழகம் வளம்பெறவும், எண்ணற்ற நல்ல திட்டங்கள் நிறைவேறவும் காரணமாக அமைந்தார். தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தொண்டராக, சமூக சேவகராக, அரசியல் தலைவராக, கல்வித் தந்தையாக திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய மக்கள் நல பணிகள் தமிழக மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கும் மதுபானக்கூடத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம். பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.