பேரறிஞர் அண்ணாவின் அன்பைப்பெற்ற மூக்கையாத்தேவர் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றேன். மதுரைக் கல்லூரியில் மாணவர் மன்றச் செயலாளராக தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்ட மூக்கையாத்தேவர் ஊண் உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் முதல் தொடர்ச்சியாக ஆறு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்பணித்தவர். மக்களவையிலும் தமிழ்நாட்டின் குரலாக செயலாற்றியவர். அன்னாரின் நூற்றாண்டு விழாவில் அவர் வழியில் நடக்க உறுதியேற்போம்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.