October 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.G.முரளி அவர்களின் தாயார் திருமதி.G.காந்த மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஊடகத்துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராஜ் குழும தொலைக்காட்சிகளுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு கோணங்களில் கிடைக்கும் செய்திகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலை சிறந்த செய்தி தொலைக்காட்சியாகவும், பாரம்பரியமிக்க நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் ராஜ் குழும தொலைக்காட்சிகளின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களின் பிரச்னைகளை மட்டுமே கூறிவிட்டு கடந்து செல்லாமல் அதற்கான தீர்வையும் நோக்கி பயணிக்கும் ராஜ் தொலைக்காட்சி, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி தொடர்ந்து நடுநிலையோடு பயணித்து மென்மேலும் பல சாதனைகள் படைக்க மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
October 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 39வது வடக்கு வட்டக் கழக துணைச்செயலாளர் திரு.C.பார்த்தசாரதி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 13, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: திரு.P.K.மூக்கையாத் தேவர் அவர்களின் மூத்த மகன் திரு.P.K.M.சுப்பிரமணியன் அவர்களின் மறைவு; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் அன்னாரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
October 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், பொதுநலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு. P.K மூக்கையாத் தேவர் அவர்களின் மூத்த மகன் திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது துரதிஷ்டவசமானது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கும் இதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
October 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருவள்ளூர் மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் திரு.மாதவரம் S.ரகு அவர்களின் தந்தை திரு.M.சம்பத் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சியிலிருந்து 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட செய்தி நிம்மதியையும், மனநிறைவையும் தருகிறது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
October 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் சேதமடைந்த சாலைகளிலும் பள்ளங்களிலும் தேங்கிநிற்கும் மழைநீரால் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று. பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு கொண்டாடப்படும் இந்நாளில், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தை வழங்குவதோடு, பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களை வேரோடு களைந்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.