February 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு.C.சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சுந்தராபுரம் கிழக்கு, சுந்தராபுரம் மேற்கு மற்றும் குறிச்சி ஆகிய பகுதி கழகங்கள் “சுந்தராபுரம்”, “ஈச்சனாரி”, “போத்தனூர்” மற்றும் “குறிச்சி” என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியங்கள், மதுக்கரை கிழக்கு, மதுக்கரை மேற்கு மற்றும் கிணத்துக்கடவு மேற்கு என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு மற்றும் சூலூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், சூலூர் ஒன்றியம் என ஒன்றிணைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : கம்பம் நகரக் கழக நிர்வாகிகள், கம்பம் நகர வார்டு கழக செயலாளர்கள், கம்பம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : “கம்பம் கிழக்கு” மற்றும் “கம்பம் மேற்கு” ஆகிய இரண்டு நகரங்கள், “கம்பம் நகரம்” என ஒன்றிணைப்பு.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய டாஸ்மாக் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதன் மூலமாக கோடி கோடியாக வருமானம் ஈட்டும் திமுக அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அதன் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் தான் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.