January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருப்போரூர் வடக்கு மற்றும் திருப்போரூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருப்போரூர் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருக்கழுக்குன்றம் கிழக்கு மற்றும் திருக்கழுக்குன்றம் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்கள் நியமனம்
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் மாவட்டம் : அவனியாபுரம் 1 மற்றும் திருப்பரங்குன்றம் 1 ஆம் பகுதி கழக நிர்வாகிகள், திருப்பரங்குன்றம் 1ஆம் பகுதிக்குட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள், பாலமேடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல அணு விஞ்ஞானியும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவருமான விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதத் திறனை மேம்படுத்தியதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொடர் கதையாகிவரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பசுமையான சூழலை பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் அறிவுறுத்திய இரண்டு மாதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்ற இணைப்பு நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளையும் விரிவாக்கம் செய்திருப்பதோடு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளையும் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பொதுமக்களிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராமசாலை திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் ஊராட்சிகள் தற்போது நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கிராமப்புற ஊராட்சியாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சியாக மாறியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும், சிறு வியாபாரிகளும் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும், வரிகளாலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது இணைக்கப்படும் ஊராட்சிகளுக்கும் அதே பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, அவசரகதியில் நடைபெற்றிருக்கும் இணைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதோடு, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பே இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மேற்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜா (எ) ராஜசேகர் அவர்களின் தாயார் திருமதி.ஆர்.ஜானகி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.