October 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 38வது தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு.A.அப்துல்மஜித் அவர்களின் மகன் திரு.A. பினாத்தர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – உச்சநீதிமன்றத்தில் உரிய அதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G. பொம்முராஜ் அவர்களின் தந்தை திரு.K.கோதண்டபாணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இன்னுயிர் நீத்த காவலர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும், முன்னின்று தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த காவலர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
October 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றிய நெய்வேலி தெற்கு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.நவனப்பன் அவர்களின் தாயார் திருமதி.அ.பாப்பம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.துளசி. செந்தில் அவர்களின் தந்தை திரு.வீ.துளசியப்பன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் தெற்கு ஒன்றியக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.அ. வினோத் அவர்களின் தந்தை திரு.R.அண்ணாதுரை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 19, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2025 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவாலயத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள். கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
October 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டம், கழுகுமலை பேரூர் கழக செயலாளர் திரு.P.பேச்சிமுத்து (எ) கோபி அவர்களின் தந்தை திரு.க.பேச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.A.நரேந்திரன் (எ) மகேஸ்வரன் அவர்களின் தந்தை திரு.R.அன்புமணி வாணாதிரியர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.