November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பொங்கலூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் : “திருவாடானை” ஒன்றிய கழகம், “திருவாடானை வடக்கு” மற்றும் “திருவாடானை தெற்கு” என இரண்டு ஒன்றியங்களாகப் பிரிப்பு.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுச்சேரி வடக்கு மாநிலம் – காரைக்கால் மாவட்டம்: மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், காரைக்கால் நகர கழக அவைத்தலைவர் நியமனம்.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : “புதுக்கோட்டை” ஒன்றிய கழகம், “புதுக்கோட்டை வடக்கு” மற்றும் “புதுக்கோட்டை தெற்கு” என இரண்டு ஒன்றியங்களாகப் பிரிப்பு.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : “காரைக்குடி நகர” கழகம், “காரைக்குடி வடக்கு நகரம்” மற்றும் “காரைக்குடி தெற்கு நகரம்” என இரண்டு நகர கழகங்களாக பிரிப்பு.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை கிழக்கு மாவட்டம் : மாவட்ட மாணவர் அணி செயலாளர், இராயபுரம் பகுதி கழக நிர்வாகிகள், பகுதி-வட்ட கழக செயலாளர்கள், பகுதி-சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
November 7, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகிகள் நியமனம்.
November 7, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக சமூகநீதியின் அடிப்படையையே சீர்குலைப்பதுபோல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.உச்சநீதிமன்ற தீர்ப்பில்10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் பட்டியலிட்டிருக்கும் காரணங்களை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ளலாம். மேலும், தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அதேநேரத்தில், இந்த 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, அம்மா அவர்கள் கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும்.
November 4, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
November 3, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களின் 1037வது சதய விழா : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோவில் அருகில் அமைந்துள்ள இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.