முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து தமிழகத்திடமிருந்த தண்ணீர் திறக்கும் உரிமையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேரளாவிற்கு தாரை வார்த்ததைப் போல இதிலும் நடந்துகொள்ளக்கூடாது. எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களைக் கொடுத்து கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சியை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.