April 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
April 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கழக அமைப்பு செயலாளர் திருமதி.சாருபாலா R. தொண்டைமான் அவர்களின் மாமியாருமான ராணி திருமதி.ரமாதேவி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
April 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
April 12, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு.G.E.அன்புமணி அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
April 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரமிக்க பதவிகளில் நேர்மையான திறன்வாய்ந்த அதிகாரி என்ற பெருமையுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ்குப்தா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், நரேஷ்குப்தாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
April 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்குகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
April 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் திரு.எஸ்.கார்த்திக் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான திரு.குரு.முருகானந்தம் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
April 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; தஞ்சையில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மேற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் – வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் – ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக செயலாளர் – வத்திராயிருப்பு மேற்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக்கழக நிர்வாகிகள் – மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர்கள் – ஊராட்சிக் கழக செயலாளர்களாகள் – நகரம் மற்றும் பேரூர் கழக வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.