June 5, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு : கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
June 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
June 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் நலன், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்காக பாடுபட்ட கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள் இன்று. மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காயிதே மில்லத் அவர்கள், அரசியல் நிர்ணய சபையில் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வாதிட்டவர். ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவரிடத்திலும் அன்பு செலுத்திய கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த நாளில் அவரது பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
June 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியதால் அதிக உயிரிழப்புகளும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் நிலை குறித்து அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
June 2, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் நியமனம்
June 2, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இசையை திரைப்படங்கள் வழியே உலகம் முழுக்கக் கொண்டு சென்று சர்வதேச இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் இன்று. தனது இசையால் அனைத்து உள்ளங்களையும் வசப்படுத்தி, அனைவரது உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் திரு. இளையராஜா அவர்கள் நீடூடி வாழ வேண்டும் என வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். தனது இசை வாயிலாக தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் மேலும் பல உயரங்களுக்கு திரு.இளையராஜா அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர், கழக விவசாயப் பிரிவு செயலாளர், இணைச்செயலாளர் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம் : கோலியனூர் ஒன்றியம் பிரிப்பு