April 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.K.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி க.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.C.ராமு அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கும் எழுச்சிக்கும் உரிமைக் குரல் எழுப்பிய மாபெரும் தலைவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து சாதி, மத, பேதமின்றி ஐயா திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
April 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றவாளி என அறிவிக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாயாக்காள் உட்பட 16 தியாகிகளின் நினைவுதினம் இன்று ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து சமத்துவமிக்க போராட்டத்தை முன்னெடுத்து வீரமரணமடைந்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் வீரத்தையும், துணிச்சலையும் இந்நாளில் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
April 2, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத்தொகுதியை சேர்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது.
April 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது – மீனவர்களை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் திமுக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.ஆம் ஆண்டு கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், அதன் பின் மத்திய ஆட்சி அதிகாரத்தில் சுமார் 16 ஆண்டுகள் அங்கம் வகித்தும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான துரும்பைப் கூட கிள்ளிப்போடவில்லை என்பதை தமிழக மீனவர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி என்ற வரிகளுக்கு ஏற்ப கச்சத்தீவு தாரைவார்க்கும் போது திரு.கருணாநிதி அவர்கள் எவ்வாறு மவுனம் சாதித்தாரோ, அதைப் போலவே தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தானே தவிர, தங்களின் மீதான உண்மையான அக்கறை அல்ல என்பதை தமிழக மீனவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.எனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் ஓராண்டில் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், கச்சத்தீவை மீட்கவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
April 1, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றிய மேலாயூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.மலைராஜ் அவர்களின் தாயார் திருமதி.ராக்காயி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 31, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் வழக்கறிஞர், தூத்துக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் என தொடரும் படுகொலைகள் – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது எப்போது?தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், தமிழகத்திற்குள் நுழைந்து வழிப்பறியில் ஈடுபடும் வெளிமாநிலக் கும்பல், ஜாமினில் வெளிவரும் ரவுடிகள் படுகொலை என ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் சிறிதும் வாய்கூசாமல் கொலைச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதாகவும், அவற்றை எதிர்க்கட்சியினர் ஊதிப் பெரிதாக்கி காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. எனவே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறியாமை எனும் மாய உலகத்திலிருந்து விழித்தெழுந்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் அதீத கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
March 31, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை நகர 15வது வார்டு கழக செயலாளர் திரு.J.பாலு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.