சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்று திறனாளிக்கான‌ கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் திரு.எஸ்.கார்த்திக் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான திரு.குரு.முருகானந்தம் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.