February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மத்திய மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு அணி நிர்வாகிகள் நியமனம்
February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தூத்துக்குடி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
February 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் பெயரில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் தி.மு.க அரசின் பகல் கனவு!
February 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி தெற்கு மாவட்டம்
February 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி தெற்கு மாவட்டம்
February 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மொழியை உலகறியச் செய்தவரும், தமிழக மக்கள் அனைவராலும் தமிழ்த்தாத்தா என அன்போடு அழைக்கப்படுபவருமான தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை அனைத்தையும் புதுப்பித்ததோடு, தமிழ் பணியை தனது உயிர்மூச்சாக கொண்டிருந்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய பணிகள் இவ்வையகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
February 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுமாறு திரு.செல்வப்பெருந்தகை அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
February 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உழைக்கும் மக்களின் உயிர் நாடியாய் இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதோடு, மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடிய தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய்மொழி மற்றும் சுயமரியாதை சமதர்ம கொள்கையில் தளராத உறுதி கொண்டவராக திகழ்ந்த சிங்காரவேலர் அவர்களின் சிந்தனையான மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
February 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதே விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஆலை உரிமையாளர்களாலும், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் விபத்துக்களை அலட்சியமாக எதிர்கொள்ளும் அரசு நிர்வாகத்தாலும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியாவது ஆபத்து நிறைந்த பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு அத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.