February 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈகைத் திருநாளுக்கான புனித ரமலான் நோன்பைத் தொடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திடுவதோடு, இறைவனை அடைவதற்கான வாழ்வியல் நெறியாகக் கருதப்படும் இந்த புனித நோன்பு காலம் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடும் மாதமாக அமையட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சங்கநூல்கள் தொடங்கி திருவிளையாடற் புராணம் வரை பல்வேறு ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து, நூலாக வெளியிட்டதோடு, தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
February 18, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.R.மணிமாறன் அவர்களின் தந்தை திரு.ராஜீ அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
February 18, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் ஊர் அனைத்தையும் கெடுப்பவர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. தமிழகத்தில் லட்சக் கணக்கானோருக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய திரு.தயாநிதி மாறன் அவர்களின் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அதிகார மமதையில் சுற்றித் திரியும் திமுகவினருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் கோவை மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 18, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் மேற்கு மாவட்ட காட்டுமன்னார்கோயில் பேரூர் மீனவர் அணி செயலாளர் திரு.R.ஐயப்பராஜா அவர்களின் மனைவி திருமதி.I.சசிகலா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
February 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
February 18, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? – அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு கே.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான திருமதி ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
February 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சிவகங்கை வடக்கு மற்றும் சிவகங்கை தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் சிவகங்கை வடக்கு ஒன்றியம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், சிவகங்கை மேற்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைக்கபடுகிறது.
February 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச் செயலாளராக திரு. N.S.தருண் அவர்களும் கழக இளைஞர் பாசறை துணைத் தலைவராக திரு.B.செந்தில்குமார் அவர்களும் நியமனம்.
February 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக, திரு.A.கமுருதீன் அவர்கள் நியமனம்.