June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
June 16, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும் ! தடைகளையும் எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியாற்றிட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்..!
June 16, 2024 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
June 15, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தன்வியின் பிறந்தநாள் என்ற நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு.யூமா வாசுகி அவர்களுக்கும், விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுமான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமிக்க மொழிநடையால் தமிழ் எழுத்து உலகில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழும் திரு.யூமா வாசுகி மற்றும் திரு.லோகேஷ் ரகுமான் ஆகிய இருவரின் விருதுப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
June 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் வடக்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.தொ.கருப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி எஸ்.ஆர்.எம் நட்சத்திர விடுதியை உள்நோக்கத்துடன் மூட முயற்சிக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதிக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கான குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹோட்டலை சட்டவிரோதமாக திமுக அரசு மூட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மாநிலத்தின் உரிமை மற்றும் மக்கள் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காத திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே வாடிக்கையாக பயன்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் வலியுறுத்துகிறேன்.
June 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
June 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவரும், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றியக் கழக செயலாளருமான கழக முன்னோடி திரு. சி.செல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
June 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திசிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு நகரம், 14வது வார்டு கழக செயலாளர் திரு.S.சையதுஅப்துல்லா அவர்களின் மனைவி திருமதி.S.தாஜிதா பேகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு.L.சத்தியமூர்த்தி அவர்களின் தந்தை திரு.S.லிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.