June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விடுவிப்பு : நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.S.காதர்மீரான் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தஞ்சை மாநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுஜாதா தனசேகர் அவர்களின் தாயாரும், கழக விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் திரு.R.தனசேகர் அவர்களின் மாமியாருமான திருமதி.ச.சரஸ்வதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.P.வடிவேல் அவர்களின் தந்தை திரு.M.பழனியாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை விட்டு வெளியேறும் பரந்தூர் பகுதி மக்கள் – சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்புச் சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் மீது அளப்பரிய பற்று கொண்ட திரு.கோபி கிருஷ்ணா அவர்கள், திரையுலகில் தொடர் சாதனை படைப்பதோடு, தான் தலைமை ஏற்றிருக்கும் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வாழ்த்தி மகிழ்கிறேன்.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி – கடுமையான நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி அவர்கள் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அதிகரித்து வரும் மணல் கொள்ளைகளும், அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மணல் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களின் படுகொலைக்கு பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் அலட்சியப் போக்கே அரசு அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களை சிறையில் தள்ளிய ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதோடு, தாய் திருநாட்டிற்காக தன்னுயிரையும் அர்ப்பணித்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவுதினம் இன்று… இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக தனக்குத் தானே முடிவுரை எழுதி, மக்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பிய புரட்சியாளர் வாஞ்சிநாதன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்…
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.