December 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் திட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது – எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பாக சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கக் கூடிய வடசென்னையில் ஏற்கனவே 3330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது கூடுதலாக 660 மெகாவாட் அளவிற்கான அனல்மின் நிலையத்தை அமைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் என அபாயகரமான தொழிற்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் வடசென்னையில் மேலும் ஒரு அனல் மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம், கொசஸ்தலை மற்றும் எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது அவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, இயற்கை வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 18, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 வது நினைவு நாள்; டிசம்பர் 24ல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தவிருக்கிறார்கள்.
December 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் கைதுக்கு பின்னர் நடந்த எழுச்சியின் பின்னணியையும் விளைவையும் ஆராய்ந்து நூலாக தொகுத்த திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் எழுத்துப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
December 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.S.தமிழரசன் அவர்களின் தாயார் திருமதி.சா.சீரங்கத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திரு.N.R.அப்பாதுரை அவர்கள் நியமனம்.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம்: கோயம்புத்தூர் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வேலூர் மாநகர் மாவட்டம்: காட்பாடி தெற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்: போளூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்: வந்தவாசி ஒன்றியம் மறுசீரமைப்பு.
December 18, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.