March 16, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீரழித்து, அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 16, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் தலைவராக (2026-2029 ) மீண்டும் தேர்வாகியிருக்கும் அன்பு சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும், அதன் நிர்வாகிகளையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, தான் சார்ந்திருக்கும் திரையுலகில் மேன்மேலும் பல்வேறு சாதனைகள் புரிய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 16, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான நடையிலும் மொழியிலும் சிறுகதைகளை எழுதுவதில் தனித்துவமிக்கவராக திகழும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எழுத்துப் பயணம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 16, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், களக்காடு ஒன்றிய மலையடிபுதூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.V.முருகன் அவர்களின் தந்தை திரு.A.வீரபுத்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 16, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.அபுல்ஹாசன் அவர்களின் தாயார் திருமதி.ஜமீலா பேபி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
March 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது – காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும் ?கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு,கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்களைக் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது. எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பப் போகின்ற நாள், இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்று அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புச் சகோதரர் தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் அளப்பறிய களப்பணியாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோரின் நல்லாட்சியை அமைத்திடுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
March 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானபீடம் விருதின் மூலம் உலக இலக்கிய அரங்கில் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “ஒப்பில்லா ஒன்பதாம் ஆண்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!” தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூலம் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தீவிர களப்பணியாற்றி வெற்றிவாகை சூடிடுவோம்!