June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாதனூர் கிழக்கு மற்றும் மாதனூர் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக மாதனூர் கிழக்கு ஒன்றியம், மாதனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் மாதனூர் தெற்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியங்களாக மறுசீரமைப்பு.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு, ஜோலார்பேட்டை மேற்கு மற்றும் ஜோலார்பேட்டை மத்தியம் ஆகிய மூன்று ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழக அமைப்பு ரீதியாக ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், மற்றும் ஜோலார்பேட்டை தெற்கு ஒன்றியம் என நான்கு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை நகரக் கழக செயலாளராக திரு.K.ராமு நியமனம்.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகம் – திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை மத்தியம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.K.புருஷோத்தமன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.P.வெங்கடேசன் நியமனம்.
June 24, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.V.மணிகண்டன் அவர்களின் தந்தை திரு.R.வேலுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மொழியின் அழகையும், இனிமையையும் தன் கவிதைகள் மூலமாக உலகறியச் செய்தவரும், தமிழ் திரையிசை உலகிற்கு அழியாப் பொக்கிஷங்களை வழங்கிய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. காதல், தத்துவம், ஆன்மீகம், மனிதநேயம் என வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் தனது பாடல் மற்றும் கவிதைகளின் மூலமாக மக்களின் உள்ளங்களை தலைமுறை கடந்தும் ஆட்கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் மற்றும் இலக்கியப் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
June 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது! சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
June 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்டம், கரூர் வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.M.பாஸ்கரன் அவர்களின் தந்தை திரு.M.முத்துசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.