May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.T.உதயகுமார் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மறுசீரமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.S.லோகநாதன், வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.பி.ஆனந்தன் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என மறுசீரமைப்பு- தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் அக்ரி திரு.G.சரவணகுமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.V.M.பாண்டியராஜா நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக திரு.அக்ரி N.இராமச்சந்திரன், கழக தலைமை செயற்குழு உறுப்பினராக திரு.தம்பி.V.தனபால், கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக திரு.இருள்நீக்கி P.சேகர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளராக திரு.S.R. முருகேசன் நியமனம்.
May 25, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
May 25, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் – மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
May 25, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.S.சுதாகர் அவர்களின் தந்தை திரு.சேகர் (எ) சேட்டு அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழகம், மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகம் மறு சீரமைப்பு. செங்கல்பட்டு மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் டாக்டர்.A.சதீஷ்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.T.S. அறிவகம் நியமனம்.