October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரப்பதம் அதிகளவில் இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் – குறுவை பருவ நெல் கொள்முதலில் ஈரப்பதத்தின் அளவை 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை சாகுபடியின் அறுவடைக்கான பணிகள் அண்மையில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு சில தினங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஈரப்பதம் இருப்பதாக கூறி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி மற்றும் அறுவடை காலத்தில் மழை பெய்வது தொடர்கதையாகி வரும் நிலையில், ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நெல் ஈரப்பதத்தை குறைக்க கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்முதல் செய்யப்படும் ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
September 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றாமல் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் கடந்த 2022 ஆம் ஆண்டு 150 சதவிகிதம் அளவிற்கு சொத்துவரியை தமிழக அரசு உயர்த்திய நிலையில், தற்போது மேலும் 6 சதவிகிதம் அளவிற்கு உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் அறிக்கையில் சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதியளித்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, திமுக அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் சொத்துவரி உயர்வுக்கான தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 26, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தென்காசி வடக்கு மாவட்டம்: குருவிகுளம் வடக்கு மற்றும் குருவிகுளம் தெற்கு ஆகிய ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “குருவிகுளம் கிழக்கு ஒன்றியம்”, “குருவிகுளம் வடக்கு ஒன்றியம்” மற்றும் “குருவிகுளம் தெற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றிய கழகங்களாக மறுசீரமைக்கப்படுகிறது
September 16, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுச்சேரி மேற்கு மாநிலக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
September 16, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுச்சேரி மேற்கு மாநிலக் கழக துணைச்செயலாளராகவும், தகவல்நுட்ப ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், மாநில தொகுதிக் கழக செயலாளர்களாகவும் மற்றும் காரைக்கால் மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், காரைக்கால் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், காரைக்கால் நகரக் கழக நிர்வாகிகளாகவும், காரைக்கால் மாவட்ட தொகுதிக் கழக செயலாளர்களாகவும் நிர்வாகிகள் நியமனம்.
September 27, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
September 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சென்னை துறைமுகத்தில் பறிமுதல் – சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான கொடிய வகை போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே நான்குமுறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப்பொருள் கடத்தியிருப்பதும், இந்த கடத்தலுக்கும் சர்வதேச கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை ஊசி, மாத்திரை, சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை பல முறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதோடு, இதுபோன்று கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
September 27, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.