March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திருவோணம் ஒன்றியக் கழகத்தின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “திருவோணம் வடக்கு ஒன்றியம்” மற்றும் “திருவோணம் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கழக அமைப்பு ரீதியாக கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வானூர், கண்டமங்கலம், வல்லம், மயிலம் ஆகிய ஒன்றியக் கழகங்கள் பிரிப்பு.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் “மாதவரம் வடக்கு” மற்றும் “மாதவரம் தெற்கு” ஆகிய பகுதி கழகங்கள், “மாதவரம் வடக்கு”, “மாதவரம் மத்தியம்” மற்றும் “மாதவரம் தெற்கு” என மறுசீரமைப்பு
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், தியாகராயநகர் வடக்கு, தெற்கு, மயிலாப்பூர் கிழக்கு, மேற்கு, விருகம்பாக்கம் வடக்கு, தெற்கு, சைதாப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிக் கழகங்களின் நிர்வாகிகள் நியமனம்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்” மற்றும் கறம்பக்குடி மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பொற்றாமரை பகுதிக் கழக செயலாளராக திரு.சி.இளங்கோவன் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக திரு.V.G.சண்முகம் நியமனம்
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழகபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் திரு.P.சீனிக்குமார், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பொருளாளர் பொறுப்பில் திரு.S.ராஜேஷ் குமரன், கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் திரு.A.S.ராமச்சந்திரன், கழக இளைஞர் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் திரு.R.B.விஜயகுமார் நியமனம்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் – திமுக ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.