January 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவரும், நாட்டு மக்களின் பரிபூரண விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வீரத் துறவியுமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று…. மன உறுதிக்கு முன் மலையும் நொறுங்கிவிடும் என்ற தீர்மானத்துடன் உழைத்தால் எவ்வித இலக்கையும் எளிதாக எட்டிப்பிடிக்க முடியும் எனக்கூறி இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த விவேகானந்தர் அவர்களின் உயரிய எண்ணங்களை பின்பற்றிட இந்நாளில் உறுதியேற்போம்….
January 11, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: கொடி காத்த குமரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
January 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தாய் நாட்டின் தேசியக் கொடியை உயர்த்திப்பிடித்த கொடிகாத்த குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று… இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தாய்நாட்டிற்காக தன்னுயிரை நீத்த உன்னதமான விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் தேசப்பற்றையும், வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
January 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2024 ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வை நடத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – வயது உச்சவரம்பால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வரையில் வெளியாகாத நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வும் நடத்தப்படாத காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறாததால் அந்த தேர்வையே இறுதி வாய்ப்பாக கருதி இரவு, பகலாக தேர்வுக்கு தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்களின் வயது உச்ச வரம்பு கடந்திருப்பதால் அவர்கள் அடுத்து வரும் தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் அறிவித்த தேர்வுகளை கூட திட்டமிட்டபடி நடத்தாமல் இளைஞர்களின் அரசுப்பணி கனவை கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வயது உச்சவரம்பால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுவதோடு, அந்த தேர்வுக்கான வயது உச்சவரம்பை 2024 ஆம் ஆண்டுக்கான வயது வரம்பு அடிப்படையிலேயே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதோடு, பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினரோடு கொண்டாட ஏதுவாக போனஸ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ், மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளையும் வழங்காமல் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். எனவே, மிகக்குறைவான ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்வதோடு, வரவிருக்கின்ற பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 12.01.2025, ஞாயிறுக்கிழமை மாலை 4 மணியளவில் திருநெல்வேலி KTC நகர், காப்பர் லீஃப் ஹோட்டல் (Copper Leaf Hotel), தாமீரா அரங்கில் நடைபெறவுள்ளது.
January 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
January 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாகலாந்து ஆளுநர் மாண்புமிகு திரு.இல.கணேசன் அவர்களின் சகோதரர் திரு.இல.கோபாலன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.இல.கோபாலன் அவர்களை இழந்து வாடும் திரு.இல.கணேசன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
January 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி திரு.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கம் மென்மேலும் தொடரவும், விஞ்ஞானி திரு.நாராயணன் அவர்கள் தலைமையிலான இஸ்ரோ வியக்கத்தக்க சாதனைகள் பல புரியவரும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
January 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது- தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் . பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் இந்த அறிவிப்பு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்குடன் செயல்பட்ட முந்தைய அரசின் பிடிவாதப் போக்கையே திரு.சந்திரபாபு நாயுடு அவர்களும் தொடர்வது, 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மைசூருக்கும் சென்னைக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கடுமையாக பாதிக்கும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.