October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளராக திரு.M.வில்விஜயன், கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச் செயலாளராக திரு.கராத்தே S.பாண்டியன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளராக திரு.V.V.கிரிதரன் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: மதுரவாயல் பகுதி மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி மற்றும் மதுரவாயல் வடக்கு பகுதி என நான்கு பகுதி கழங்களாக மறுசீரமைக்கப்படுகிறது.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்:மாவட்டக் கழக துணைச்செயலாளர், மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி, மதுரவாயல் வடக்கு பகுதி ஆகிய பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: திருப்புல்லாணி ஒன்றிய பிரிப்பு: திருப்புல்லாணி கிழக்கு, திருப்புல்லாணி மத்தியம் மற்றும் திருப்புல்லாணி மேற்கு என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: மண்டபம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: நயினார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூர் கழக நிர்வாகிகள், மயிலாடுதுறை வடக்கு மற்றும் மயிலாடுதுறை தெற்கு ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்டம்: அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு மற்றும் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக் கழக நிர்வாகிகள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது. மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர். எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.