April 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் சகோதரி திருமதி. கோகுல இந்திரா அவர்களின் கணவர் வழக்கறிஞர் திரு.சந்திரசேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. சந்திரசேகர் அவர்களை இழந்துவாடும் திருமதி. கோகுல இந்திரா உட்பட குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
April 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும் – வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதலமைச்சரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார். இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர். தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். 2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
April 24, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.
April 24, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், குரோம்பேட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.காஞ்சி D.வசந்தகுமார் அவர்களின் தாயார் திருமதி.D.அன்னம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 24, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.K.பொன்னாச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 23, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டங்கள்! இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெறவுள்ள மே தின பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
April 23, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்:மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நியமனம்.
April 23, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்: கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 23, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், சிங்கம்புணரி ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், சிங்கம்புணரி ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
April 23, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கரூர் கிழக்கு மாவட்டம்: குளித்தலை ஒன்றியக் கழகம் குளித்தலை கிழக்கு, மேற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியக் கழகம் கிருஷ்ணராயபுரம் வடக்கு, தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு.