August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : மதுரை புறநகர் மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கொட்டாம்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
August 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேனி அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் படுகொலை – சட்டவிரோதச் செயல்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் சன்மானம் மரணம் தானா? தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை குறித்து பலமுறை தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைக்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையோ, திமுக அரசின் முழுநேர ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் கனிமவளங்களையும் தடுத்து நிறுத்தவோ, அது குறித்து புகார் அளித்தாலோ அதற்கான சன்மானம் மரணம் தான் என்பதையே அடுத்தடுத்து நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 26, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாள் விழா: நெல்கட்டும்செவலில் கழக பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
August 26, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் தங்குதடையில்லாத வெற்றி நிச்சயம் என்பதோடு, துன்பங்களுக்குக் காரணமான வினைகள் நீங்கி, அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது மக்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானை போற்றி வணங்கிடும் இந்நாளில் அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக, நெல்லை திரு.A.பரமசிவம் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைத் தலைவராக, திருமதி.M.செல்வி நேதாஜி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்