தூத்துக்குடி மக்களின் நலனை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ”தூத்துக்குடி மாநகரின் தந்தை” என அனைவராலும் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று… ஐந்து முறை நகர் மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அடிப்படைக் கல்வி, கூட்டுறவு வங்கியில் கடனுதவி, தீண்டாமை எதிர்ப்பு, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் மக்கள் மனதில் என்றென்றும் வானளவு உயர்ந்து நிற்கும்.

சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன். தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.