April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது…
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன்.
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணாவின் அன்பைப்பெற்ற மூக்கையாத்தேவர் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றேன். மதுரைக் கல்லூரியில் மாணவர் மன்றச் செயலாளராக தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்ட மூக்கையாத்தேவர் ஊண் உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் முதல் தொடர்ச்சியாக ஆறு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்பணித்தவர். மக்களவையிலும் தமிழ்நாட்டின் குரலாக செயலாற்றியவர். அன்னாரின் நூற்றாண்டு விழாவில் அவர் வழியில் நடக்க உறுதியேற்போம்.
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதகுலம் மேன்மையடைய நன்னெறிகளைப் போதித்த மகாவீரர் வர்த்தமானரின் ஜெயந்தியை முன்னிட்டு ஜைன மத சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகாவீரர் பிறந்த இந்த நாளில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஏழை, எளியோருக்கு உதவும் நற்குணத்தை வளர்தெடுப்போம்.
April 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் அடக்கு முறை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் வீரதமிழர்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்திய தினம் இன்று. இந்த வீரப்புரட்சியில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாயக்காள் உட்பட்ட 17 பேரின் தியாகத்தை நினைவு கூர்ந்து இந்த நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செல்லுத்திடுவோம்.
April 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் திரு.எஸ்.கார்த்திக் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள தகவல் அறிந்து மகிழ்ந்தேன். எஸ்.கார்த்திக் மற்றும் அணியின் உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாழ்த்துகின்றேன்.
March 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
March 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் 7 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயம் அடைந்தோர் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். தொடர்ச்சியாக இது போன்ற விபத்துகள் நேரிடாமல் இருக்க இனியாவது இந்த அரசு ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமா?
March 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
March 21, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது.