தலைமைக் கழக அறிவிப்பு : இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் 03.08.2024 (சனிக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு அன்று காலை 10:00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு காலை 11:00 மணியளவில் கழக துணைப்பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளருமான, முன்னாள் அமைச்சர் திரு.C.சண்முகவேலு அவர்களது தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த இரு நிகழ்விற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் வார்டு, வட்டம், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டக் கழகங்களின் நிர்வாக வசதிகளுக்காக “கன்னியாகுமரி கிழக்கு”, “கன்னியாகுமரி மத்தியம்” மற்றும் “கன்னியாகுமரி மேற்கு” என மூன்று மாவட்டக் கழகங்களாக மறுசீரமைக்கப்படுகிறது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.N.ராகவன் அவர்களும், கன்னியாகுமரி மத்திய மாவட்ட கழக செயலாளராக திரு.M.ஸ்டீபன் அவர்களும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.A.ஸ்டெல்லஸ் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.