September 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனி இயக்கத்தைத் தொடங்கி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
September 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு :கடலூர் மேற்கு மாவட்டம் : கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகரக் கழக செயலாளர் திரு.B.K.மணிவண்ணன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
September 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய மாண்புமிகு திரு.சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய திருநாட்டின் வளர்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
September 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு:கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முன்னாள் அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் அவர்களின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
September 8, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திரு.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்துகிறார்கள்!
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்தொழித்த மாவீரருமான சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினம் இன்று. போர்க்களத்தில் ஆங்கிலேய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, தாய் மண்ணையும், மக்களையும் காத்திட தன் உயிரையும் துறந்து வீரமரணமடைந்த தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
September 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அழிவில்லா செல்வமாம் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த இந்நாளில் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொது அறிவு ஆகியவற்றையும் சேர்த்து போதித்து, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணியை இந்நாளில் போற்றி கொண்டாடிவோம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று… எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம்.