கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய், போன்ற மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில், அவர் விரும்பிய அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம், மற்றும் மதநல்லிணக்கம் மேன்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.

சாதியக் கொடுமைகள் மற்றும் சமுதாய பேதங்களோடு, பெண்ணடிமைத் தனத்தையும், மனிதர்களைத் தாழ்த்தும் மூட நம்பிக்கைகளையும் வேரோடு களையத் தொடர்ந்து போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை மேலோங்கச் செய்ததோடு, பொதுநலத் தொண்டையே தன் உயிர் மூச்செனக் கருதி இறுதிவரை போராடிய சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பெரும் தொண்டுகளை நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப மேன்மைமிக்க உழவுத் தொழிலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களை கொண்டாடி மகிழும் தேசிய விவசாயிகள் தினம் இன்று. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களையும், எண்ணற்ற சவால்களையும் எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகளான விவசாயிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும், அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

தமிழக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – அரசு இயந்திரத்தின் அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டோ ஜியோ ( FOTA – GEO ) அறிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையின் 187வது வாக்குறுதியான அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புதல், 309வது வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 311வது வாக்குறுதியான சமநிலைக்குச் சம ஊதியம்  உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, தங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் அரசுத் தரப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யக் குழுக்களை அமைத்து காலதாமதம் ஏற்படுத்துவதையே அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தங்களுக்குக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 02.01.2026, வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள வசந்தம் மஹாலில் நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 26.12.2025, வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணியளவில், மதுரை தெப்பகுளம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.