May 10, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் உரிய நேரத்தில் நிறைவேற்றும் எனவும் நம்புகிறேன்.
May 10, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின் மறு உருவமாகவும் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை அடித்தளமாக, அளவிட முடியாத அன்பு கொண்டவராக, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய்மார்களின் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி கொண்டாடுவோம்.
May 10, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சவால்கள் நிறைந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தான் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்திட்ட ஆருயிர் சகோதரர் செயல்வீரர் மேலூர் திரு ஆர். சாமி அவர்களின் நினைவு தினம் இன்று. சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மேலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில் மட்டுமில்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் என்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து தரப்பு கழகத்தினரின் அளப்பரிய அன்பையும் பெற்று, போர்ப்படைத் தளபதியாக தொண்டர்களின் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் சகோதரர் மேலூர் ஆர். சாமி அவர்களின் நினைவுநாளில் அவர் கண்ட இலக்குகளை விரைந்து அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.
May 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
May 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இன்று வெளியாகியிருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மனம் தளராமல் அடுத்து வரவிருக்கும் துணைத்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
May 5, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு S.காமராஜ் அவர்கள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கழகப் பொதுச்செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
May 5, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சிறந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவருமான திரு ஆர்.பி சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
May 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது அயராத உழைப்பால் பதிவு செய்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்குச் சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
May 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது.எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் அன்பு தம்பி திரு S.காமராஜ் அவர்கள், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எங்களின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
May 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @CPR_VP