கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. வழக்கமான பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் திரு. விஜயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்திரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே, எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
பகுத்தறிவு பகலவன், சமூக தீமைகளுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி போராடிய தீர்க்கதரசி தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாளான இன்று, சென்னை-அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
தலைமைக் கழக செய்தி வெளியீடு: திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு : பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், பல்வேறு கழக மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை/திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மானூர் வடக்கு, மானூர் மத்தியம், மானூர் தெற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், கழக அமைப்பு ரீதியாக “மானூர் வடக்கு ஒன்றியம்” மற்றும் “மானூர் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் மறுசீரமைப்பு.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, கும்பகோணம் சுவாமி மலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்து தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் மாநகர போக்குவரத்துக் கழகம்(சென்னை) – வடக்கு மண்டல நிர்வாகிகள் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகள், அரிமளம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், திருமயம் தெற்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : கண்ணங்குடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம்.
தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்தநாள் விழா: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும். எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
வடசென்னை மத்திய மாவட்டம் : ஆர்.கே நகர் மேற்கு பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
மத்திய சென்னை மத்திய மாவட்டம்: துறைமுகம் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைப்பு!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்மானுவேல் சேகரனாரின் 66ஆவது நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 15 அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேருரையாற்றவுள்ளார்.
01.09.2023 நிர்வாகிகள் நியமனம் – செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கிழக்கு, புதுக்கோட்டை மத்தியம், புதுக்கோட்டை தெற்கு , மதுரை புறநகர் தெற்கு, விருதுநகர் கிழக்கு, விருதநகர் மத்தியம், தென்காசி வடக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம்.
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார்!
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் அறுவடைத் திருநாளான பொன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்திரப்பிரதேசத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள மதுரை வந்திருந்த பயணிகளின் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி சிலிண்டர் எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தி விழா – செப்டம்பர் 1ஆம் தேதி நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்
கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு படகில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதாமல் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அந்நியர்கள்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் – கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மக்களிடையே அன்றாட செய்திகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மாலைமுரசு அதிபர் மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. தமிழர் தந்தை என போற்றப்படும் ஆதித்தனார் அவர்களின் வழியில் தமிழ் இன உணர்வு கொண்டவராகத் திகழ்ந்து, தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் மாலைமுரசு நாளிதழ் மூலம் தமது இதழியலை முன்னெடுத்தவர் பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்கள். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது தமிழ் இனப்பற்று, மொழிப்பற்று, ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக திரு.டிடிவி தினகரன், கழக தலைவராக திரு.C.கோபால், கழக துணைத்தலைவராக திரு.S.அன்பழகன் ஆகியோர் தேர்வு!
கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் (06.08.2023)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர் நியமனம்
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மன்னர் தீரன் சின்னமலை நினைவு நாள்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி சென்னையில் உள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளர் நியமனம்
பெரம்பலூர் மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள், பெரம்பலூர் நகரக் கழக செயலாளர் , குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்
திருவாரூர் மாவட்டம் : நீடாமங்கலம் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
வடசென்னை மத்தியம் மாவட்டம் : மாவட்டக் கழக இணைச்செயலாளர், துணைச்செயலாளர் நியமனம்
தென்சென்னை தெற்கு மாவட்டம் : வேளச்சேரி கிழக்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
சேலம் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நியமனம்
சேலம் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், சங்ககிரி கிழக்கு மற்றும் நங்கவள்ளி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், தாரமங்கலம் நகர கழக செயலாளர், அரசிராமணி சங்ககிரி பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
சேலம் மத்தியம் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பனமரத்துப்பட்டி கிழக்கு மற்றும் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : சிவகிரி மற்றும் கொல்லன்கோவில் பேரூர் கழக செயலாளர் நியமனம்
திருப்பூர் மாநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் நியமனம்
திருப்பூர் புறநகர் மாவட்டம் : காங்கேயம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், தளி பேரூர் கழக செயலாளர் நியமனம்
கோவை மாநகர் மாவட்டம் : மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் நியமனம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், காட்டுப்புத்தூர் மற்றும் தொட்டியம் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : திருவெறும்பூர், பொன்மலை, அரியமங்கலம் பகுதி பிரிப்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : வையம்பட்டி ஒன்றியம் பிரிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் : ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நகர சார்பு அணி செயலாளர், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்
புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் “கழக மாணவர் அணி” மற்றும் “கழக மாணவியர் அணி” என இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது!
தலைமைக் கழக செய்தி வெளியீடு : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் ; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்; கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலின் போது கடந்த மே மாதம் 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியின தலைவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புனிதமான முஹர்ரம் மாதத்தில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் அவர்களின் வழியில் அன்பு, அறத்தை பின்பற்ற இந்நாளில் உறுதி ஏற்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி தலைவர், கழக இளைஞர் பாசறை தலைவர் மற்றும் பொருளாளர் நியமனம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் : திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் நியமனம்
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நியமனம்
செங்கல்பட்டு மத்தியம் மாவட்டம் : மாவட்ட மாணவர் அணி செயலாளர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் நியமனம்
காஞ்சிபுரம் மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் : மாவட்ட கழக துணைச்செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : மாவட்ட வர்த்தக அணி செயலாளர், அரிமளம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றம் ஊராட்சி-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மேலப்பாளையம் பகுதி பிரிப்பு
திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
தென்காசி தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்
Previous
Next
காணொளி
🔥🔥🔥பழனிசாமிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெல்லவேண்டும் என்று எண்ணம் இல்லை🔥🔥🔥
🔥🔥🔥பாட்டாளி மக்கள் கட்சி தயவு இல்லாமல் எடப்பாடி ஜெயிக்க முடியாது🔥🔥🔥
🔥🔥🔥எத்தன ஆயிரம் கோடி செலவு செய்து எத்தனை தேர்தலை பார்த்தாலும் இந்த டிடிவி தினகரன் விடமாட்டான்🔥
🔥🔥🔥இந்த டிடிவி தினகரன் துரோகத்தை வேறு அருக்காமல் விடமாட்டேன்🔥🔥🔥
🔴LIVE: தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாள் | பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை | AMMK
🔴LIVE : கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | 17.09.2023
காவிரி நீரை பெறுவது தமிழ்நாட்டின் உரிமை
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 கொடுத்தால் வரவேற்பேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
மேலும் பார்க்க
புகைப்படங்கள்
homepage \ புகைப்படங்கள்
கழக பொதுக்குழு கூட்டம்-2023
மேலும் பார்க்க
பத்திரிகை வெளியீடுகள்
தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்க…
September 21, 2023
இரங்கல் செய்தி – தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
September 21, 2023
இரங்கல் செய்தி – திருவாரூர் மாவட்டம்
September 20, 2023
இரங்கல் செய்தி – கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
September 20, 2023
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நா…
September 20, 2023
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரி…
September 19, 2023
சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற…
September 19, 2023
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதி…
September 19, 2023
விடுவிப்பு : ராணிப்பேட்டை மாவட்டம்
September 18, 2023
இரங்கல் செய்தி : அரியலூர் மாவட்டம்
September 18, 2023
இரங்கல் செய்தி : தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
September 18, 2023
பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர…
September 18, 2023
பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று ச…
September 17, 2023
பகுத்தறிவு பகலவன், சமூக தீமைகளுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி போராடிய தீர்க்கதரசி தந்தை பெரியார் …
September 17, 2023
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
September 17, 2023
தலைமைக் கழக செய்தி வெளியீடு: திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொத…
September 16, 2023
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோரு…
September 16, 2023
தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றியவரும், மிகப் பிற்படுத்…
September 16, 2023
இரங்கல் செய்தி : கடலூர் கிழக்கு மாவட்டம்
September 15, 2023
இரங்கல் செய்தி : திருவாரூர் மாவட்டம்
September 15, 2023
தலைமைக் கழக செய்தி வெளியீடு : பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு…
September 15, 2023
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இதயதெய்வம் …
September 15, 2023
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மானூர் வடக்கு, மானூர் மத்தியம், மானூர் தெற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், க…
September 15, 2023
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை…
September 15, 2023
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 …
September 14, 2023
திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உய…
September 14, 2023
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழி…
September 13, 2023
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்து தொழிலாளர்கள் இதயதெய்வம…
September 13, 2023
திருப்பத்தூர் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிக…
September 13, 2023
புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகள், அரிமளம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகி…
September 13, 2023
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
September 13, 2023
சிவகங்கை மாவட்டம் : கண்ணங்குடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
September 13, 2023
99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் மு…
September 13, 2023
தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்தநாள் விழா: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அ…
September 13, 2023
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை த…
September 13, 2023
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள ச…
September 12, 2023
வடசென்னை மத்திய மாவட்டம் : ஆர்.கே நகர் மேற்கு பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்க…
September 11, 2023
மத்திய சென்னை மத்திய மாவட்டம்: துறைமுகம் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
September 11, 2023
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மிகுந்த வருத்த…
September 11, 2023
திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைப்பு!
September 11, 2023
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்…
September 11, 2023
திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையு…
September 8, 2023
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின…
September 7, 2023
“தேவர் தந்த தேவர் ” என போற்றப்படுபவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தலைமையில் பணிய…
September 6, 2023
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பாக மரியாதையை செலுத்தப்ப…
September 5, 2023
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை தனிக்குழு அமைத்து முற்றிலுமா…
September 5, 2023
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு…
September 5, 2023
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
September 5, 2023
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தன் இறுதி ம…
September 5, 2023
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார…
September 5, 2023
திரு. இமானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு நாள் : செப்டம்பர் 11 ஆம் தேதி, பரமக்குடியில் அமைந்துள்ள அன…
September 4, 2023
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் திரு.பன்னீர்செல்வத்தின் …
September 4, 2023
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வே…
September 4, 2023
சிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 9 வது அதிபராக தேர்வாகியிருக்கும் தமிழ் வம்…
September 2, 2023
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா – எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை வெற்றிகர…
September 2, 2023
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் – மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக ச…
September 1, 2023
விழுப்புரம் கிழக்கு மாவட்டம் – வானூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், கோட்டக்குப்பம் நகரக் கழக ச…
September 1, 2023
புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் – கறம்பக்குடி தெற்கு ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் – ஆவுடையார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் – சேடப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய ஊராட்சிகள் மறுசீரம…
September 1, 2023
மேலும் பார்க்க
தமிழகம் தலைநிமிரட்டும்
தமிழர் வாழ்வு மலரட்டும்
சமூக ஊடகம்
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
AMMK's - Facebook
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2022 AMMK. All Rights Reserved.