January 25, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களை நினைவுகூறும் மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினமான இன்று, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
January 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இறந்த தாயின் உடலை சைக்கிளில் 18கி.மீ எடுத்துச் சென்ற மகன் – திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டதே அந்த மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எதாவது காரணத்தை கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களை நினைவுகூறும் மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினம் இன்று. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் குறிப்பிட்ட மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு எதிராக இறுதிவரை போராடி ”தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தோடு உயிர்நீத்த நூற்றுக்கணக்கான தியாகிகளின் தியாக உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
January 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு – அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கணினி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீண்ட நேரம் மூடி மறைக்கும் முயற்சியில் அரசுப்பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, அரசுப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் தொடங்கி அனைத்து விதமான கட்டடங்களும், உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த துயரச்சம்பவம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று… பாலின பாகுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்புகளின் மூலம் பெண் குழந்தைகள் சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக நிற்கவும், சமத்துவமிக்க வளமான எதிர்காலத்தை பெற்றிடவும் உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களையும் குற்றச் சம்பவங்களையும், அடியோடு தடுத்து நிறுத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலூர் தொகுதிக்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்து மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ் கல்வெட்டுகள், சமணப் படுகைகள், பழமையான குடைவரைக் கோயில்கள் போன்ற தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களோடு, ஏரிகளும், குளங்களும் அடங்கிய இயற்கை வளங்களையும், பல்லுயிர் பாரம்பரிய தளத்தையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய செப்டம்பர் 2023 முதல் ஏலம் முடிவடைந்த நாளான நவம்பர் 7, 2024 வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மேலூர் பகுதியில், டங்ஸ்டன் திட்டம் வர உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கபட நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக கூறுவது, “பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்” என்ற கதையையே நினைவு படுத்துகிறது. தமிழகத்தில் மக்களை போராட தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் பலனடைய நினைத்த திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையிலும், கனிம வளத்தை விட மக்கள் நலனே முக்கியம் எனக்கருதியும் இம்முடிவை எடுத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மதுரை மாவட்டம் மேலூர் மக்கள் சார்பாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், பண்டைய கால புராதானச் சின்னங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
January 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வங்கம் தந்த சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.விஜய அருண் பிரபாகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளராகவும், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், அந்தியூர் வடக்கு மற்றும் அந்தியூர் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்களாகவும் நியமனம்.