April 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சொந்த ஊர்களிலேயே தடுத்து நிறுத்தம் – மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கை, ஸ்மார்ட் கார்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம், வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு என தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு, தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.அதிலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் என்று இருந்த வேலையை, 8 மணி நேரம் வேலை மற்றும் நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என மாற்றி உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
April 21, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று பெரியகுளத்தில் நடைபெற்றது.
April 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வரிகளின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்தவரும், தன் தலைசிறந்த படைப்புகளின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை விதைத்தவருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்து தன் எழுச்சி மிகுந்த எழுத்துக்களாலும், ஆற்றல் மிகுந்த படைப்புகளாலும் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களையும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
April 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தன் வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் அர்ப்பணித்த போப் பிரான்சிஸ் அவர்களை இழந்து வாடும் கத்தோலிக்க திருச்சபையினருக்கும், கிறிஸ்துவப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
April 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததாக புகார் – பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது.திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் உறையூர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற திமுக அரசும் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?எனவே, மூன்று பேர் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
April 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பு மற்றும் கருணையின் அடையாளமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்.கூலி உயர்வு வழங்கக் கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னரும், மீண்டும் அதே போராட்டத்தில் பங்கேற்றிருப்பது, கூலி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு எத்தகையை அவசியமானது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருப்பதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, இப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற தமிழக அமைச்சர்களின் வாக்குறுதி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு அவர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
April 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தினத்தந்தி நாளிதழின் அதிபரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று. பத்திரிகை, கல்வி, தொழில், ஆன்மீகம், விளையாட்டு என தான் தேர்ந்தெடுத்த அனைத்து துறைகளிலும் சாதனையாளராக விளங்கிய ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகளை இந்நாளில் நினைவில் வைத்து போற்றுவோம்
April 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை – விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? – திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை -2025 மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத திமுக அரசு, முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கிய பின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளும், உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குடும்பத்தினருக்காக மட்டுமே அமைச்சரவையை கூட்டி விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
April 17, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு சிறிதும் அடிபணியாமல், தன் இறுதி மூச்சு வரை துணிச்சலுடன் போரிட்டு, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாக திகழ்ந்த வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.