January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.G.பாலு (எ) பாலகிருஷ்ணன் அவர்கள் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளராக திரு.R.பாலு அவர்கள் நியமனம்.
January 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிறப்பிலேயே தான் ஒரு ஜனநாயகவாதி என பிரகடனப்படுத்தி, இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் வலிமையோடு நிமிர்ந்து நிற்கச் செய்த தேசத்தந்தை, ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்றிய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. பொதுநலச் சேவைக்காக சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் சுதந்திர போராட்டத்தில் புகுத்தி வெற்றி கண்டதோடு, நாடு லட்சிய பூமியாக மாற வேண்டும் என்ற கொள்கை பிடிப்பு கொண்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம்.
January 29, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்-சிவகங்கை மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 01.02.2025, சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
January 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் – முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ? சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
January 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை வழங்கும் NVS-02 செயற்கைக்கோளை GSLV-F15 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். GSLV-F15 மூலம் தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து விண்வெளி உலகில் இந்தியா புதிய உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
January 28, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள்; கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள்!