இயற்கை பேரிடர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு விதமான சவாலான சூழலிலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.விவசாயத்தில் ஏற்படக்கூடிய சிறிய அளவு மாற்றமும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எக்காலத்திற்கும் உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.

2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி, துரோணாச்சாரியார் விருதை வென்றிருக்கும் சதுரங்க பயிற்சியாளர் திரு.ஆர்.பி ரமேஷ், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை வென்றிருக்கும் தமிழக கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபாடி வீரர் பவன்குமார் ஷெராவத், இறகு பந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் உட்பட விருதுகளை வென்றிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு விளையாட்டுத்துறையில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.