December 21, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
December 20, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
December 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?!
December 13, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து தமிழகத்திடமிருந்த தண்ணீர் திறக்கும் உரிமையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேரளாவிற்கு தாரை வார்த்ததைப் போல இதிலும் நடந்துகொள்ளக்கூடாது. எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களைக் கொடுத்து கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சியை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
December 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று என மகாகவி கொண்டிருந்த உயர்சிந்தனைகளை எந்நாளும் போற்றிக் கொண்டாடிடுவோம்-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 6, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.- கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒவ்வொரு கணமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம்.
December 3, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 2, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன். – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
November 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.